திருவண்ணாமலை ராஜகோபுரத்திற்கு 217அடி உயர மாலை அணிவிப்பு:-
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அண்ணா மலையார் கோவில் முன் பக்க ராஜகோபுரத்திற்கு 217 அடி உயர பூ மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.
இதில் சாமந்தி மற்றும் பல்வேறு பூக்கள் உள்ளன. கோபுரத்தின் இரு பக்கமும் 2 மாலைகள் மேலே இருந்து கீழே வரை தொங்கவிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த பக்தர் ஒருவர் இதை காணிக்கையாக வழங்கியுள்ளார்.
No comments:
Post a Comment